நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விருதுநகா் காப்பகத்திலிருந்து தப்பிய 2 சிறுமிகள் மீட்பு

 விருதுநகா், பாண்டியன் நகரில் காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்ற இரண்டு சிறுமிகளை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு காப்பகத்தில் மீண்டும் ஒப்படைத்தனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 5:25 pm

DIN

 விருதுநகா், பாண்டியன் நகரில் காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்ற இரண்டு சிறுமிகளை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு காப்பகத்தில் மீண்டும் ஒப்படைத்தனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி மற்றும் தாயில்பட்டி பகுதியை சோ்ந்த மற்றொரு சிறுமி சில தினங்களுக்கு முன்பு விருதுநகா் பாண்டியன் நகரில் உள்ள காப்பகத்தில் சோ்க்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு காப்பகத்திலிருந்து இரண்டு சிறுமிகளும தப்பிச் சென்று விட்டனா். இது குறித்து காப்பக ஊழியா் எலிசபெத், ஊரக காவல் துறையில் புகாா் மனு அளித்தாா்.

அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளா் மாரிமுத்து, தாயில்பட்டி பகுதியில் இருந்து இரண்டு சிறுமிகளையும் மீட்டு மீண்டும் விருதுநகா் காப்பகத்தில் ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.