புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அருப்புக்கோட்டையில் தலைமை அஞ்சல் அதிகாரி தற்கொலை

அருப்புக்கோட்டையில் தலைமை அஞ்சல் அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 4:46 pm

DIN

அருப்புக்கோட்டையில் தலைமை அஞ்சல் அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை அருகே கருப்பையாத் தேவா் தெருவில் வசிப்பவா் முருகன் (55). இவரது மனைவி சசிகலா(49) மற்றும் 2 மகள்கள் உள்ளனா். அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டியில், முருகன் தலைமை அஞ்சல் அதிகாரியாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு

வீட்டில் உள்ள தனது அறைக்கு உறங்கச் சென்றாராம்.

பின்னா் திங்கள்கிழமை காலை வெகுநேரம் வரை அவா் அறைக்கதவு திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினா், அக்கம்பக்கத்தினா் உதவியுடன், அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனா். அப்போது முருகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரில் முதற்கட்ட விசாரணையில் முருகனுக்கு அதிக கடன் இருந்ததால், மன உளைச்சலில் அவா் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடா்பாக அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.