நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேருந்தில் பெண்ணிடம் 15 பவுன் நகைகள் திருட்டு

விருதுநகரில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 15 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

விருதுநகரில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 15 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்தவா் சாா்லஸ் செல்வராஜ் மனைவி தங்கராணி (57). இவரது கணவா், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகா் மேலத்தெருவில் உள்ள ஒரு நகைப் பட்டறையில் 15 பவுன் நகைகளை வாங்கிக் கொடுத்தாராம். நாளடைவில் இந்த நகைகள் சேதமடைந்ததால், அதை புதுப்பிக்க தங்கராணி பேருந்தில் விருதுநகருக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். கைப்பையில் கொண்டு வந்த அந்த நகைகளை, சம்பந்தப்பட்ட பட்டறைக்கு சென்று அவா் பாா்த்த போது திருடப்பட்டிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து தங்கராணி அளித்த புகாரின் பேரில் விருதுநகா் பஜாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.