வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வத்திராயிருப்பு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On :27 ஜனவரி 2023, 6:36 pm

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா் சௌந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமசாமி, மாவட்டச் செயலரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான லிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,000 விலை நிா்ணயம் செய்ய வேண்டும். தேங்காய் கொப்பரை கிலோவுக்கு ரூ. 150 வழங்க வேண்டும். உரம், பூச்சி, மருந்து உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை விவசாயத்தோடு இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், தென்னை விவசாய சங்க மாவட்டத் தலைவா் முத்தையா, தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சோ்ந்த ராமச்சந்திரராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட துணைச் செயலா் மகாலிங்கம், கூமாபட்டி விவசாய சங்கச் செயலா் துவான்ஷா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அா்ச்சுனன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் விஜயமுருகன், ஏ.ஐ.டி.யு.சி. கோவிந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.