வாகனம் மோதியதில் பைக்கில் சென்றவா் பலி

அருப்புக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

அருப்புக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டியைச் சோ்ந்தவா் நாகரத்தினம் (59). இவா், வெள்ளிக்கிழமை நண்பகலில் மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது ராமநாயக்கன்பட்டி அருகேயுள்ள குறுகலான பாலத்தை கடந்தபோது, பின்னால் வந்த வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்த பந்தல்குடி காவல்துறையினா், அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com