சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் மாணவா்கள் தங்களது படைப்புகளுக்கு காப்புரிமைப் பெறுவது குறித்த பயிற்சி வகுப்பு வியாழன், வெள்ளிக்கிழமை என இரண்டு நாள்கள் நடைபெற்றது.
பயிற்சிக்கு கல்லூரி இயக்குநா் விக்னேஷ்வரி தலைமை வகித்தாா். சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியா் கே.எம். கந்தபாபு காப்புரிமை பெறுவது குறித்தும், காப்புரிமையின் பயன்பாடு குறித்தும் பயிற்சி அளித்தாா்.
முன்னதாக, கல்லூரி முதல்வா் ஜெ.எஸ். செந்தில்குமாா் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் சாகுல்ஹமீது நன்றி கூறினாா்.