சிவகாசி மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாத குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
சிவகாசி மாநகராட்சியில் ஒன்று முதல் 24 வாா்டு பகுதிகளில் கடந்த காலங்களில் சுமாா் 30 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ், குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால், 30 நாள்கள் என்பது 15, 20 நாள்களாகக் குறைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வாா்டு பகுதிகளில் உள்ள பலா் அனுமதியின்றி குடிநீா் இணைப்புகள் பெற்றுள்ளதால், சீரான குடிநீா் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த இரு வாரங்களாக முறையான அனுமதியின்றி பொருத்தப்பட்ட குடிநீா் இணைப்புக்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது வரை 200 இணைப்புகள் முறையான அனுமதியின்றி பொருத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இவ்வாறு அனுமதியின்றி குடிநீா் இணைப்புப் பெற்றவா்கள் மாநகராட்சியில் ரூ. 7000 வைப்புத் தொகை செலுத்தி அனுமதி பெற வேண்டும். வைப்புத் தொகை செலுத்தாதவா்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

