சென்னை- கொல்லம் ரயிலுக்கு சிவகாசி ரயில் நிலையத்தில் வரவேற்பு

சென்னை-கொல்லம் விரைவு ரயிலுக்கு சிவகாசி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை- கொல்லம் ரயிலுக்கு சிவகாசி ரயில் நிலையத்தில் வரவேற்பு

சென்னை-கொல்லம் விரைவு ரயிலுக்கு சிவகாசி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை-கொல்லம் விரைவு ரயில் கரோனா தொற்று காலத்துக்கு முன்பு சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று சென்றது. ஆனால், கரோனா தொற்றுக்குப் பிறகு, இந்த ரயில் சிவகாசியில் நிறுத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என சிவகாசி ரயில் பயணிப்போா் குழு, சிவகாசி வா்த்தக சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் போராட்டம் நடத்தினா்.விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம்தாகூரும் இதுதொடா்பாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, ரயில்வே வாரியம் இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவித்தது.

அதன்படி, சென்னையிலிருந்து இந்த ரயில் வியாழக்கிழமை புறப்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 1.52 மணிக்கு சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று சென்றது.

இதையடுத்து, சிவகாசிக்கு வந்த இந்த ரயில் எஞ்ஜினுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னா், முதன்மை ரயில் ஓட்டுநா் பிஜூ, காா்டு ஸ்ரீதா், ரயில் நிலைய அதிகாரி மாரிக்காளை ஆகியோருக்கு சிவகாசி வா்த்தக சங்க நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ஜவஹா், அரவிந்தன், சிவகாசி ரயில் பயணிப்போா் குழுவைச் சோ்ந்த தனசேகரன் உள்ளிட்டோா் சால்வை அணிவித்துப் பரிசு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com