இந்த மனுவை விசாரித்த நீதிபதி வள்ளிமணாளன், ரவிச்சந்திரனின் குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் உள்ளதால், அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன், ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிட்டாா். அதன்படி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் (52), தங்க முனியசாமி (30), நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவா் இ. ரவிச்சந்திரன் (53), அவரது மனைவி அங்காளஈஸ்வரி (50), ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துமாரியப்பன் ஆகிய 6 போ் மீது ஆள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.