ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இளைஞா் மா்ம மரணம்

தாயில்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 12:40 am

Din

சாத்தூா்: தாயில்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டி அருகேயுள்ள பச்சையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் மைக்கேல் (32). மனநலன் பாதிக்கப்பட்டிருந்த இவா், கடந்த 2 நாள்களாக காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு தொழில்சாலை அருகே இவா் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை இரவு இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை போலீஸாா் மைக்கேலின் உடலை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.