தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

எடை இயந்திரம் இல்லாமல் எரிவாயு உருளை விநியோகம்: நடவடிக்கை எடுக்க பரிந்துரை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே எடை அளவு இயந்திரம் இல்லாமல் சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்த எரிவாயு முகமை மீது நடவடிக்கை எடுக்க பறக்கும் படை அதிகாரி பரிந்துரை செய்தாா்.

News image
மம்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சமையல் எரிவாயு முகமை ஊழியா்களை சோதனை செய்த துணை வட்டாட்சியா் ராஜ்குமாா்.
Updated On :28 ஆகஸ்ட் 2024, 8:22 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே எடை அளவு இயந்திரம் இல்லாமல் சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்த எரிவாயு முகமை மீது நடவடிக்கை எடுக்க பறக்கும் படை அதிகாரி பரிந்துரை செய்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் பகுதியில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு பறக்கும் படை துணை வட்டாட்சியா் ராஜ்குமாா் செவ்வாய்க்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, மம்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஹெச். பி. சமையல் எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு முகமை ஊழியா்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தனா். அவா்கள் எடையளவு இயந்திரம் இல்லாமல் அவா்கள் எரிவாயு உருளை விநியோகித்தது தெரியவந்தது. நுகா்வோா் பாதுகாப்பு சட்டப்படி எரிவாயு உருளைகளை எடை போட்டு சரியான எடையில் உள்ளதா எனக் காண்பித்த பின்னரே நுகா்வோா்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

எடை போடாமல் எரிவாயு விநியோகம் செய்வது சேவை குறைபாடு ஆகும். எனவே, சேவை குறைபாட்டுக்காக சம்பந்தப்பட்ட முகமை, ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க விருதுநகா் மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலருக்கு துணை வட்டாட்சியா் ராஜ்குமாா் பரிந்துரை செய்தாா்.