ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பரமக்குடி பாலியல் வழக்கு: டிச.7-க்கு ஒத்திவைப்பு

பரமக்குடி பாலியல் வழக்கை வருகிற 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:33 am

Din

பரமக்குடி பாலியல் வழக்கை வருகிற 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, 5 மாதங்களில் தீா்ப்பு வழங்க உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

இதனடிப்படையில், கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி முதல் ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்ட பரமக்குடி நகா்மன்ற உறுப்பினா் சிகாமணி, இடைத்தரகா்களான அன்னலட்சுமி உமா, கயல்விழி, மறத்தமிழா் சேனை நிறுவனா் புதுமலா் பிரபாகா், ஜவுளிக் கடை உரிமையாளா் ராஜா முகமது ஆகியோா் முன்னிலையாகினா். அப்போது, 5 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு சாட்சிகளிடம் நீதிபதி சுதாகா் வாக்குமூலம் பதிவு செய்தாா். மேலும், இந்த வழக்கு விசாரணையை வருகிற 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.