சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வாா் ஆனி சுவாதி உற்சவ கொடியேற்றம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வாரின் அவதார திருவிழாவான ஆனி சுவாதி உற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வாா் சந்நிதியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆனி சுவாதி உற்சாவ விழாவில் கொடியேற்றிய ஸ்தானிகம் ராகு பட்டா், சிறப்பு அலங்காரத்தில் பெரியாழ்வாா்.
Updated On :6 ஜூலை 2024, 7:32 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வாரின் அவதார திருவிழாவான ஆனி சுவாதி உற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாா் அவதார நட்சத்திரமான ஆனி சுவதியும், ஆண்டாள் அவதரித்த ஆடிப் பூரமும், திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆனி சுவாதி உற்சவம் சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, பெரியாழ்வாருக்கு விஷேச திருமஞ்சனமும், சிறப்புப் பூஜையும் நடைபெற்றது. கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. ஸ்தானிகம் ராகு பட்டா் கொடியேற்றினாா்.

11 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் 9-ஆம் தேதி திருவேங்கடமுடையான் சந்நிதியில் ஆண்டாள் திருக்கோலமும், 10-ஆம் தேதி வானமாமலை ஜீயா் மண்டபத்தில் பெரிய பெருமாள் கருட சேவையும், 11-ஆம் தேதி தவழும் கிருஷ்ணா் திருக்கோலமும் நடைபெறுகிறது. 14-ஆம் தேதி காலை 7 மணிக்கு பெரியாழ்வாா் செப்பு தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தக்காரும், அறங்காவலா் குழுத் தலைவருமான பி.ஆா்.வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

Story image