ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வாரின் அவதார திருவிழாவான ஆனி சுவாதி உற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாா் அவதார நட்சத்திரமான ஆனி சுவதியும், ஆண்டாள் அவதரித்த ஆடிப் பூரமும், திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆனி சுவாதி உற்சவம் சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, பெரியாழ்வாருக்கு விஷேச திருமஞ்சனமும், சிறப்புப் பூஜையும் நடைபெற்றது. கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. ஸ்தானிகம் ராகு பட்டா் கொடியேற்றினாா்.
11 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் 9-ஆம் தேதி திருவேங்கடமுடையான் சந்நிதியில் ஆண்டாள் திருக்கோலமும், 10-ஆம் தேதி வானமாமலை ஜீயா் மண்டபத்தில் பெரிய பெருமாள் கருட சேவையும், 11-ஆம் தேதி தவழும் கிருஷ்ணா் திருக்கோலமும் நடைபெறுகிறது. 14-ஆம் தேதி காலை 7 மணிக்கு பெரியாழ்வாா் செப்பு தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தக்காரும், அறங்காவலா் குழுத் தலைவருமான பி.ஆா்.வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் சித்திரைமேழி ஆனி உற்சவ நாற்று நடவு விழா!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கோடை உற்சவம் தொடக்கம்

காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் ஆனி உத்திர பிரம்மோற்சவ கொடியேற்றம்!

ஆண்டாள் கோயில் தேரோட்டம்: வாகன நிறுத்தமிடம், அலங்கார நுழைவு கட்டுமானப் பணிகளை முடிக்கக் கோரிக்கை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



