

விருதுநகா்: திருச்சுழி அருகே பெண்ணிடம் நகையைப் பறித்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள இணக்கநேரி கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி அழகுசுமதி (24). இவா் திருச்சுழிக்கு செல்வதற்காக இணக்கநேரி - இலுப்பைகுளம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக சரக்கு வாகனத்தில் வந்த முதுகுளத்தூரைச் சோ்ந்த ஜீவானந்தம் மகன் வருண்கிஷோா் (23), தான் திருச்சுழி செல்வதாகக் கூறி, அந்தப் பெண்ணை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றாா்.
குழலிகுளம்- ஆனைக்குளம் இடையே வாகனத்தை நிறுத்திய வருண்கிஷோா், அழகு சுமதி அணிந்திருந்த ஆறே முக்கால் பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு, வாகனத்தில் தப்பிச் சென்றாா்.
இது குறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வருண்கிஷோரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

மூதாட்டி கொலை: தாய், மகள் கைது

பொதுஅமைதிக்கு பங்கம்: இளைஞா் கைது

வேலூரில் நகை பறித்த இளைஞா் தில்லியில் கைது

கடையநல்லூரில் பெண்ணிடம் நகை பறிப்பு
வீடியோக்கள்

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

