தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பொதுஅமைதிக்கு பங்கம்: இளைஞா் கைது

நாச்சியாா்கோவில் அருகே திருநறையூரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த இளைஞரை நாச்சியாா்கோவில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :11 மார்ச் 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

நாச்சியாா்கோவில் அருகே திருநறையூரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த இளைஞரை நாச்சியாா்கோவில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே திருநறையூா் வள்ளுவா் தெருவில் செவ்வாய்க்கிழமை சிலா் கிறிஸ்துவ மதப் பிரசாரம் செய்தனா். அவா்களை அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் மகன் ஆதித்யன் (30) என்பவா் தட்டிக்கேட்டு கைப்பேசியில் விடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தாா். இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ஜோதிநாயகம் நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் ஆதித்யனை பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்து புதன்கிழமை கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.