ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தாய் தற்கொலை முயற்சி: மகன் பலி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் குடும்பத் தகராறில் புதன்கிழமை இரவு மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றதில் மகன் பலி.

News image

உயிரிழந்த சிறுவன் முஜித்.

Updated On :6 நவம்பர் 2024, 10:24 pm

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் குடும்பத் தகராறில் புதன்கிழமை இரவு மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றதில் மகன் பலியானார்.

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள அருளாச்சி இந்திரா குடியிருப்பைச் சோ்ந்தவா் கணேசன் (36). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா, மகன் முஜித் (இரண்டரை வயது). இந்த நிலையில், தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சங்கீதா கோபித்துக் கொண்டு வாசுதேவநல்லூருக்கு சென்றாா். அங்கு மகன் முஜித்துக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு, தானும் அவற்றை உள்கொண்டாா். பிறகு, அங்கிருந்து ராஜபாளையம் ரயில் நிலையத்துக்கு வந்த அவா் மகனுடன் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றாா்.

அப்போது அங்கிருந்த ரயில்வே போலீஸாா் இருவரையும் மீட்டு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து வாசுதேவநல்லூா் போலீஸாரும், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.