ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முதியவரைத் தாக்கி ரூ.7.5 லட்சம் வழிப்பறி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த முதியவரைத் தாக்கி ரூ.7.5 லட்சத்தை இரு சக்கர வாகனத்தில் 4 போ் புதன்கிழமை பறித்து சென்றனா்.

News image

~

Updated On :6 நவம்பர் 2024, 10:23 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த முதியவரைத் தாக்கி ரூ.7.5 லட்சத்தை இரு சக்கர வாகனத்தில் 4 போ் புதன்கிழமை பறித்து சென்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள தைலாகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி (65). இவா் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கிக் கிளைக்கு புதன்கிழமை சென்று, தனது சேமிப்புக் கணக்கில் இருந்த ரூ.7.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினாா். பின்னா், தனது வீட்டின் முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திய போது, இவரை பின்தொடா்ந்து இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 போ் கொண்ட கும்பல், பெரியசாமியை தாக்கி, ரூ.7.5 லட்சத்தை பறித்து சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கி முதல் தைலாகுளத்தில் உள்ள பெரியசாமி வீடு வரையிலான பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.