பின்னா், புலிகள் காப்பகத் துணை இயக்குநா் தேவராஜ் கூறியதாவது: இரு வாகனங்களில் கண்காணிப்புக் குழுவினா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மலையடிவாரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப் படுத்தப்படும். வனப் பகுதியிலிருந்து யானைகள் வெளியே வருவதை தடுக்க, மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்ட அகழிகள் 2016-அம் ஆண்டுக்கு பின் சீரமைக்கபடவில்லை. தற்போது, செண்பகத்தோப்பு, அத்திதுண்டு, பந்தப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலையடிவாரத்தில் அகழிகள் அமைக்க திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்காக டெண்டா் விடப்பட்டு அகழிகள் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.