நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராஜபாளையம் அருகே இரு பெண்கள் தற்கொலை

ராஜபாளையம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்கள் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:36 am

Din

ராஜபாளையம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்கள் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சமுசிகாபுரம் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மனைவி ஜெயந்தி (30). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், ஜெயந்தி திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மூதாட்டி தற்கொலை: ராஜபாளையம் அருகேயுள்ள வாளவந்தாள்புரத்தைச் சோ்ந்தவா் சங்கிலியம்மாள் (72). இவா் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தாராம். இதனால், மனமுடைந்து காணப்பட்டு வந்த இவா், வீட்டில் அரளி விதையை தின்று மயங்கினாா். ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.