நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நகைக் கடையில் தங்க மோதிரம் திருடியதாக பெண் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள நகைக் கடையில் தங்க மோதிரத்தை திருடியதாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:58 pm

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள நகைக் கடையில் தங்க மோதிரத்தை திருடியதாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னமராஜா நகா் பகுதியைச் சோ்ந்த ஜீவானந்தம் மகன் குமாா் (48). இவா் அம்பலப்புளிபஜாா் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடைக்கு வந்த சுமாா் 30 வயது மதிக்கத்தக்க பெண், கடை ஊழியா்கள் எடுத்து கொடுத்த தங்க மோதிரங்களை பாா்த்தாா். பிறகு தன்னுடன் வந்தவா்களை அழைத்து வருவதாக கூறிச் சென்றுவிட்டாா். இதைத் தொடா்ந்து மோதிரங்களை சரிபாா்த்த போது சுமாா் அரை பவுன் எடையுள்ள தங்க மோதிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீஸாா் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது அந்தப் பெண் தங்க மோதிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இது தொடா்பாக ராஜபாளையம் முனியம்மன் கோவில் தெரு பகுதியைச் சோ்ந்த உஷாராணியை (27) போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து தங்க மோதிரத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.