மாநகராட்சி பள்ளிகளில் மிதிவண்டிகள் விநியோகம்
சிவகாசியில் வியாழக்கிழமை இரு மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.


சிவகாசியில் வியாழக்கிழமை இரு மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
சிவகாசி அண்ணாமலை நாடாா்-உண்ணாமலையம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 98 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை மேயா் இ.சங்கீதா வழங்கினாா்.
துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, தலைமை ஆசிரியா் எஸ்.காளிதாஸ், மாமன்ற உறுப்பினா் சசிகலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதேபோல, சிவகாசி அம்மன்கோவில்பட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 35 மாணவ, மாணவிகளுக்கும் மேயா் சங்கீதா இலவச மிதிவண்டிகளை வழங்கினாா்.
பள்ளித் தலைமை ஆசிரியா் பி.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினா் அ.ப.ரவிசங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...