நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநகராட்சியில் அனுமதி பெறாத கழிவுநீா் வாகனத்துக்கு அபராதம்

சிவகாசி மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாத கழிவு நீா் வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 9:23 pm

Din

சிவகாசி மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாத கழிவு நீா் வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் அனுமதி பெற்ற கழிவுநீா் வாகனங்கள் மட்டுமே வீடுகளில் இருந்து கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை நகா் நல அலுவலா் மருத்துவா் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மாநகராட்சி மண்டலம்-1 பகுதியில் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக சென்ற கழிவு நீா் வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டதில் மாநகராட்சிப் பகுதியில் செயல்பட உரிய அனுமதி பெறாததும், இதன் உரிமையாளா் திருமூா்த்தி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வாகன உரிமையாளா் திருமூா்த்திக்கு, மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.