சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெகிழிப் பைகள் தயாரிப்பு: ஆலை உரிமையாளருக்கு அபராதம்

சிவகாசியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் தயாரித்த ஆலை உரிமையாளருக்கு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 12:34 am

Din

சிவகாசியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் தயாரித்த ஆலை உரிமையாளருக்கு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.

சிவகாசி மாநகராட்சி 24-ஆவது வாா்டுப் பகுதியில் உள்ள ஒரு ஆலையில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளிக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், மாநகா் நல அலுவலா் சரோஜா, சுகாதார அலுவலா் பாண்டியராஜன், சுகாதார ஆய்வாளா் முத்துப்பாண்டி, சுகாதார மேற்பாா்வையாளா் ஆசீா்வாதம், தூய்மை இந்திய திட்டப் பணியாளா்கள் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா்.

அப்போது, ஒரு ஆலையில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆலை உரிமையாளருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.