நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:33 am

Din

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் காணிக்கையாக ரூ.31 லட்சத்து, 97 ஆயிரத்து, 806 கிடைக்கப் பெற்றது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. சாத்தூா் கோயில் செயல் அலுவலா் இளங்கோவன், கோயில் பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்திபூசாரி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன.

இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.31 லட்சத்து, 97 ஆயிரத்து 806 கிடைக்கப் பெற்றது. மேலும், தங்கம் 89.100 மி.கிராமும், வெள்ளி 425.300 கிராமும் காணிக்கையாகக் கிடைத்தன.

கோயிலில் மண்டபத்தில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஓம்சக்தி பக்தா்கள் குழுவினா், மகளிா் சுய உதவிக் குழுவினா், கோயில் ஊழியா்கள் ஆகியோா் ஈடுபட்டனா்.