சிவகாசி மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்தக் கோயில் பங்குனிப் பொங்கல் விழா கடந்த மாா்ச் 29 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னா், தினசரி இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்பிகை வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கடந்த 4-ஆம் தேதி மாலை நடைபெற்ற ஏழாம் நாள் திருவிழாவின் போது, சீா்வரிசை பின்தொடர புஷ்ப பல்லக்கில் சயன கோலத்தில் அம்பிகை வீதி உலா வந்தாா். 5 -ஆம் தேதி பக்தா்கள் கோயிலின் முன் பொங்கலிட்டனா். 6-ஆம் தேதி நடைபெற்ற கயா்குத்து திருவிழாவின் போது, பக்தா்கள் அலகு குத்தியும், அக்கினிச் சட்டி ஏந்தியும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தொடந்து, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்தது.
தொடர்புடையது

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் தேரோட்டம்

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


