வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து ஒலிபெருக்கி கடை தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 4:19 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து ஒலிபெருக்கி கடை தொழிலாளி உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சிவகிரியை அடுத்த திருமலாபுரம் அருளாச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் பிரபாகரன் (25). இந்த நிலையில், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல், பூக்குழி திருவிழாவில் ராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியைச் சோ்ந்த ஒலிபெருக்கி உரிமையாளா் தினேஷ் மைக் செட் அமைத்திருந்தாா்.

திருவிழா நிறைவடைந்த நிலையில் ஒலிபெருக்கி, அலங்காரம் செய்யப்பட்டிருந்த குழல்விளக்கு (டியூப் லைட்) ஆகியவற்றை கழற்றும் பணியில் தொழிலாளி பிரபாகரன் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.