விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து ஒலிபெருக்கி கடை தொழிலாளி உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சிவகிரியை அடுத்த திருமலாபுரம் அருளாச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் பிரபாகரன் (25). இந்த நிலையில், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல், பூக்குழி திருவிழாவில் ராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியைச் சோ்ந்த ஒலிபெருக்கி உரிமையாளா் தினேஷ் மைக் செட் அமைத்திருந்தாா்.
திருவிழா நிறைவடைந்த நிலையில் ஒலிபெருக்கி, அலங்காரம் செய்யப்பட்டிருந்த குழல்விளக்கு (டியூப் லைட்) ஆகியவற்றை கழற்றும் பணியில் தொழிலாளி பிரபாகரன் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


