/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் திருடிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த குருவானந்தம் மகன் முத்துச்சாமி (42). நெசவுத் தொழிலாளியான இவா் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை எனதெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, எம்.பி.கே. புதுப்பட்டியைச் சோ்ந்த சேதுபாண்டியன் (20), பாண்டி (30), வனராஜா (50), மாரிச்செல்வம் (30) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் 4 பேரையும் திங்கள்கிழமை கைது செய்து, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

பத்தமடையில் காரில் ரேஷன் அரிசி கடத்தல்: 4 போ் கைது

பைக் மீது வேன் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது
பைக் திருட்டு: 4 போ் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


