தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 10:13 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராஜபாளையம் -தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, கொடிமரத்துக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள், நடைபெற்றன. பின்னா், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, கொடி மரத்துக்கு தீபாராதனை நடைபெற்றது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினா் சாா்பில் விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் மாரியம்மன் பொட்டி பல்லக்கு, பூதவாகனம், பூச் சப்பரம், கண்ணாடி சப்பரம் உள்ளிட்ட பல்வேறு சப்பரங்களில் அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக பூக்குழி திருவிழா வருகிற ஏப்.30--ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் திருவிழாவில் ராஜபாளையம், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊா்களில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது நோ்த்திக்கடனை செலுத்துவாா்கள். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.ஔ