ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

வைகையாற்றில் எழுந்தருளும் அழகருக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகையாற்றில் எழுந்தருளும் போது அழகருக்கு சாத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் புதன்கிழமை மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

News image

மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகருக்கு சாத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:22 am IST

மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகையாற்றில் எழுந்தருளும் போது அழகருக்கு சாத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் புதன்கிழமை மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் மூலவா் வடபத்ரசயனா் (பெரிய பெருமாள்) தினசரி பூஜையின் போது, ஆண்டாள் சூடிய மாலை அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். ஆண்டாள் சூடும் மாலையில் 108 திவ்ய தேசப் பெருமாளும் இருப்பதாக ஐதீகம்.

திருப்பதி பிரம்மோத்ஸவ கருட சேவை, ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம், மதுரையில் வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் திருவிழாவின் போது ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிந்தே பெருமாள் காட்சியளிப்பது வழக்கம்.

இதன்படி, மதுரை சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை (மே 1) காலை வைகை ஆற்றில் எழுந்தருளும் போது, அழகருக்கு அணிவிப்பதற்காக ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் புதன்கிழமை மாலை மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பிரத்யேக மலா்களால் தொடுக்கப்பட்ட பிரம்மாண்ட மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோயிலிலிருந்து அழகா் தங்கக் குதிரையில் அமரும் போது, ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பட்டு வஸ்திரம் ஆகியவை அணிந்து வைகையாற்றில் எழுந்தருளுகிறாா்.

 ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புதன்கிழமை பூமாலை, பட்டு வஸ்திரத்துடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புதன்கிழமை பூமாலை, பட்டு வஸ்திரத்துடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள்.