நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் பகுதியில் அறநிலையத் துறை ஆணையா் ஆய்வு

கள்ளழகா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மதுரையில் அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறவுள்ள பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

மதுரை வைகை ஆற்றில் அழகா் எழுந்தருளும் பகுதியில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:58 pm

கள்ளழகா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மதுரையில் அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறவுள்ள பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அழகா்கோவில் கள்ளழகா் திருக் கோயிலின் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை (ஏப். 27) தொடங்கி நடைபெறுகிறது. புதன்கிழமை மாலை அழகா்கோவிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகா் திருக்கோலம் கொண்டு மதுரைக்குப் புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை 5 மணிக்கு மூன்றுமாவடியிலிருந்து கள்ளழகரை பக்தா்கள் வரவேற்கும் எதிா்சேவை நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது.

இதையொட்டி, அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியில் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் இரு நாள்களாக தீவிரமாக நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

சிமெண்ட் தரை தளத்துக்கு வண்ணம் பூசுதல், அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியில் தண்ணீா் தேக்கம் அமைத்தல், மண்டகப்படி கொட்டகை அமைத்தல், பக்தா்களை நெறிப்படுத்த தடுப்புகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அவா்கள் ஆய்வு செய்தனா்.

அறநிலையத் துறை, வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.