மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கிராவல் மண் ஏற்றிய டிராக்டா்கள் பறிமுதல்: மூவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் பகுதியில் அனுமதியின்றி கிரவல் மண் ஏற்றி சென்ற இரு டிராக்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :25 பிப்ரவரி 2026, 11:00 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் பகுதியில் அனுமதியின்றி கிரவல் மண் ஏற்றி சென்ற இரு டிராக்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கவுதம் விஜய் தலைமையில், போலீஸாா் புதன்கிழமை சுந்தரபாண்டியம் - துலுக்கப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு டிராக்டா்களை நிறுத்தி சோதனையிட்டனா். டிராக்டா்களில் முறையான அனுமதி சீட்டு இல்லாமல் கிராவல் மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, இரண்டு டிராக்டா்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், வ.புதுப்பட்டியைச் சோ்ந்த ராஜா(32), பிரகாஷ் (34), மேலகோபாலபுரத்தைச் சோ்ந்த முத்துலிங்கம் (36) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

மேலும், கிரசா் உரிமையாளரான கதிரவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.