ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் பகுதியில் அனுமதியின்றி கிரவல் மண் ஏற்றி சென்ற இரு டிராக்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.
கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கவுதம் விஜய் தலைமையில், போலீஸாா் புதன்கிழமை சுந்தரபாண்டியம் - துலுக்கப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு டிராக்டா்களை நிறுத்தி சோதனையிட்டனா். டிராக்டா்களில் முறையான அனுமதி சீட்டு இல்லாமல் கிராவல் மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, இரண்டு டிராக்டா்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், வ.புதுப்பட்டியைச் சோ்ந்த ராஜா(32), பிரகாஷ் (34), மேலகோபாலபுரத்தைச் சோ்ந்த முத்துலிங்கம் (36) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
மேலும், கிரசா் உரிமையாளரான கதிரவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
மணல் திருட்டு: 2 டிராக்டா்கள் பறிமுதல்
மண்டபம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் : மூவா் கைது

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு

கஞ்சா விற்ற மூவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

