அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

மணல் திருட்டு: 2 டிராக்டா்கள் பறிமுதல்

மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

News image

பறிமுதல்!

Updated On :12 ஏப்ரல் 2026, 12:23 am IST

தேவாரம் அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்ட புவியியல், சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளா் சுந்தரராஜ், தேவாரம் அருகே பொன்குன்றம் மலைப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அந்தப் பகுதியில் இரண்டு டிராக்டா்களில் சிலா் மணல் அள்ளி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரராஜ் தேவாரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் அந்த 2 டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா். மேலும் மணல் திருட்டில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.