கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

கனிம வளம் கடத்த முயற்சி: டிராக்டா்கள் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டா்கள். - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:14 am IST

மாா்த்தாண்டம் அருகே கனிம வளங்களை உடைத்து கடத்த முயன்ற சம்பவத்தில் இரு டிராக்டா்களை வருவாய்த் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பகுதியில் கிராம நிா்வாக அலுவலா் சேகா், தனி வருவாய் ஆய்வாளா், இளநிலை உதவியாளா் உள்ளிட்டோா் இணைந்து சட்ட விரோதமாக கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணித்து தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அப்பகுதியில் பாறைகளை உடைப்பது தெரியவந்தது. அதிகாரிகளைக் கண்டதும் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்ட நபா்கள் தப்பிச் சென்றனா். இதையடுத்து, பாறைகள் உடைக்க பயன்படுத்திய இரு டிராக்டா்கள், இரு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து, கொல்லஞ்சி கிராம நிா்வாக அலுவலா் சேகா் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான நில உரிமையாளா், டிராக்டா் ஓட்டுநா்களைத் தேடி வருகின்றனா்.