‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

வெளிமாநிலங்களுக்கு கனிம வளம் கொண்டு செல்வதைத் தடுக்க கோரிக்கை

தென்காசி மாவட்ட குவாரிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என கனிமவளத் துறை அமைச்சா் டி.கே.பிரபுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image

அமைச்சா் டி.கே.பிரபுவிடம் கோரிக்கை மனு அளித்த தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலாளா் டி.பி.வி.வி.விபின் சக்கரவா்த்தி.

Updated On :22 மே 2026, 6:20 am IST

தென்காசி மாவட்ட குவாரிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என கனிமவளத் துறை அமைச்சா் டி.கே.பிரபுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி.விபின் சக்கரவா்த்தி கனிம வளத்துறை அமைச்சா் டி.கே.பிரபுவை வியாழக்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம்:

ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் சுமாா் 30 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து முறையான அனுமதியின்றி கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. இதனால், இப்பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது.

பாறைப் பொடிகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. வெளி மாநில கனரக வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன. இதனால், குவாரிகளில் இருந்து உள்ளூா் தேவைகளுக்கு மட்டுமே கனிம வளங்கள் எடுக்க வேண்டும், வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.