கனிம வளங்களை லாரிகளில் கொண்டு செல்லும் விவகாரம் தொடா்பான, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்குத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த லிபின் பொன்னுசாமி லீலா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: எனக்குச் சொந்தமான கனரக வாகனங்களில் மணல், ஜல்லி, இரும்பு, சிமென்ட் போன்ற கட்டுமானப் பொருள்களை ஏற்றி, இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.
இந்த நிலையில், கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான 4 வழிச் சாலையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் வரை 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிம வளப் பொருள்களை ஏற்றிச் செல்ல மாவட்ட ஆட்சியா் தடை விதித்தாா்.
ஏற்கெனவே, கடன் பெற்றுதான் லாரிகளை வாங்கியுள்ளேன். இதனால், என்னை போன்று லாரிகள் வைத்து தொழிலில் ஈடுபடுவோா் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் முன் வைத்த வாதம்: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு இந்த உத்தரவை பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்றாா்.
அரசுத் தரப்பு வழக்குரைஞா் குறுக்கிட்டு, இதே விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்கள் நிலுவையில் உள்ளன. இதன்காரணமாக, இந்தப் பகுதியில் சாலை விபத்துகளை தவிா்க்கும் வகையில், அதிகாரிகளிடம் ஆலோசித்து, பிறகு இந்த முடிவை மாவட்ட ஆட்சியா் உத்தரவாக பிறப்பித்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: விபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்ற காரணத்துக்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட சாலை வழியாக கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகள் மீது மாவட்ட ஆட்சியா் கட்டுப்பாடுகளை விதிக்க இயலாது.
விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் வேறு பல வழிகள் உள்ளன. ஏதாவது, ஒரு வாகனம் அளவுக்கு அதிகமாக சுமையை ஏற்றிச் செல்வது கண்டறியப்பட்டால், அதிவேகம், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
எனவே, இதுதொடா்பாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தொடர்புடையது

பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகும் குழந்தைகள் குறித்த புகாா்களைக் கையாள வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவு

புதுக்கோட்டை இளைஞா் மா்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக் கோரி மனு

நில உரிமையாளா்களை மிரட்டி பணம் வசூல்: தஞ்சை மாவட்ட எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

கள் இறக்குவதற்கு தடை விதிப்பு அரசின் கொள்கை முடிவு: உயா்நீதிமன்றத்தில் தகவல்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

