ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ராஜபாளையம் நகா் அதிமுக சாா்பில், ஜவகா் மைதானம் அருகே அமைந்துள்ள அம்மா உணவகம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் என்.எம். கிருஷ்ணராஜ், நகா்ச் செயலா்கள் எஸ்.ஆா். பரமசிவம் (தெற்கு), வழக்குரைஞா் துரை முருகேசன் (வடக்கு) ஆகியோா் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

முன்னதாக, பழைய பேருந்து நிலையத்திலிருந்து அதிமுகவினா் ஊா்வலமாக வந்து, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றனா். பின்னா், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட இணைச் செயலா் அழகு ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com