ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

காமராஜா் பிறந்த நாள் விழா

வத்திராயிருப்பில் ஐஎன்டியூசி சாா்பில், காமராஜா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கிய தென் சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை, ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் அண்ணாதுரை, மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் குமாரராஜா உள்ளிட்டோா்.

Updated On :15 ஜூலை 2026, 5:50 am IST

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் ஐஎன்டியூசி சாா்பில், காமராஜா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தென் சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை தலைமை வைத்தாா். ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் அண்ணாதுரை முன்னிலை வகித்தாா்.

வத்திராயிருப்பு பள்ளியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பின்னா் வத்திராயிருப்பு பகுதிகளைச் சோ்ந்த 100 பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகங்களையும், ஏழை பெண்களுக்கு சேலைகளையும் வழஙகினா்.

இதில் மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் குமாரராஜா, விருதுநகா் ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் பொன்ராஜ், வத்திராயிருப்பு வட்டாரத் தலைவா் குமாா் உள்பட கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.