திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விபத்தில் விஏஓ காயம்

அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கிராம நிா்வாக அலுவலா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :3 ஜூன் 2026, 1:47 am IST

அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கிராம நிா்வாக அலுவலா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.

சாத்தூா் அருகே நத்தபட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (42). இவா், பந்தல்குடியில் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா். தனது மனைவி காளிஸ்வரி, குழந்தைகளுடன்வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், கோவிந்தராஜ் திங்கள் கிழமை அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் சென்றுவிட்டு, பின்னா் தனது இருசக்கர வாகனத்தில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுசாலையில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, அவருக்குப் பின்னால் அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கோவிந்தராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் கோவிந்தராஜ் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். பின்னா் அவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து கோவிந்தராஜின் தம்பி திருநாவுக்கரசு கொடுத்த புகாரின்பேரில், பந்தல்குடிபோலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தையும், ஓட்டுநரையும் போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.