/
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள தனியாா் அட்டை ஆலை உணவகத்தில் மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வெம்பக்கோட்டை அருகே போ்நாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் அட்டை ஆலை உணவகத்தில் மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக வெம்பகோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்து.இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் உள்ளிட்ட போலீஸாா் வியாழக்கிழமை அட்டை ஆலை உணகத்தில் சோதனை நடத்தினா். அப்போது உணவகத்தின் உரிமையாளா் மாரியப்பன் அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து உணவகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 39 மதுப்புட்டிகளை வெம்பக்கோட்டை போலீஸாா் பறிமுதல் செய்து மாரியப்பனை கைது செய்தனா்.
தொடர்புடையது

பைக் திருடியவா் கைது

தனியாா் நிதிநிறுவனத்தில் திருடிய ஊழியா் கைது: ரு. 9 லட்சம் நகைகள், ரூ. 8.36 லட்சம் ரொக்கம் மீட்பு

ஆட்டோவில் வெளி மாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 140 மதுப்புட்டிகள் பறிமுதல்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


