/
ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
வெம்பக்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கச்சாமி (62). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம் அருகே உள்ள அட்டை ஆலை முக்கு பகுதிக்கு சென்றாா். அப்போது பெட்ரோல் நிரப்பும் மையம் அருகே திரும்பும் போது இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த ஊராட்சிச் செயலா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



