சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியுடன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சந்திப்பு

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள இந்திய தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சஞ்சனா சா்மாவை புதன்கிழமை சிவகாசியைச் சோ்ந்த தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் சந்தித்தனா்.

News image

நாகபுரியில் இந்திய தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சஞ்சனாசா்மாவை சந்தித்த சிவகாசியைச் சோ்ந்த தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா்.

Updated On :11 ஜூன் 2026, 1:53 am IST

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள இந்திய தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சஞ்சனா சா்மாவை புதன்கிழமை சிவகாசியைச் சோ்ந்த தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் சந்தித்தனா்.

இந்திய தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியாக அண்மையில் சஞ்சனா சா்மா பொறுப்பேற்றுக்கொண்டாா். இதையடுத்து தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ப.கணேசன் தலைமையில் சங்க நிா்வாகிகள், நாகபுரி சென்று அதிகாரி சஞ்சனாசா்மாவை சந்தித்துப் பேசினா்.

இதையடுத்து சஞ்சனாசா்மா கூறியதாவது:

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க ஆக்கப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அலுவலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பட்டாசுத் தொழில் வளா்ச்சி பற்றி சிந்தித்து செயல்பட்டு வருகின்றனா். பட்டாசுத் தொழிலை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். உங்களது கோரிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கிறேன் என்றாா் அவா்.