சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பணம் வழிப்பறி செய்த மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வழிப்பறி செய்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 12:42 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வழிப்பறி செய்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜ். இவா் ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் உள்ள ஒரு கடையில் வேலை பாா்த்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடித்து வீட்டுக்கு நடந்து சென்றாா். ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே சென்றபோது, 3 போ் அவரை வழிமறித்து சட்டை பையிலிருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவைச் சோ்ந்த குட்லக் என்ற மாரிச்செல்வம், குமரன் தெருவைச் சோ்ந்த சுந்தரராஜ், முத்துப்பாண்டி ஆகிய 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.