பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் காவலா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 12:06 am IST

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகே உள்ள சித்தையன்கோட்டை பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் ஜெயக்குமாா் (36). இவா் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை பரமக்குடியில் நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்வுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக ஜெயக்குமாா் பரமக்குடியில் இருந்து திருச்சுழி செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது திருச்சுழி அருகே சூச்சனேரி விலக்கு பகுதியில் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பயணிகள் நிழல் குடையின் பக்கவாட்டு சுவரில் இரு சக்கர வாகனம் மோதி அதிலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமாா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.