வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிவகாசி வழியே வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரயில் மாா்ச் 18-இல் இயக்கம்

சிவகாசி வழியே வேளாங்கண்ணிக்கு வருகிற 18- ஆம் தேதி முதல் வாராந்திர ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :14 மார்ச் 2026, 3:00 am

சிவகாசி வழியே வேளாங்கண்ணிக்கு வருகிற 18- ஆம் தேதி முதல் வாராந்திர ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

எா்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே சிவகாசி, மதுரை வழியே நிரந்தரமாக வாராந்திர அதிவிரைவு ரயில் (16363)வருகிற 18- ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. வாரத்தில் புதன்கிழமை மட்டும் இயக்கப்படும் இந்த ரயில் எா்ணாகுளத்தில் இரவு 11.50 மணிக்கு புறப்படும். சிவகாசிக்கு அந்த ரயில் மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9.05 மணிக்கு சிவகாசிக்கும், 11 மணிக்கு மதுரைக்கும் வந்து சேரும். வேளாங்கண்ணிக்கு மாலை 5.35 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்கத்தில் வேளாங்கண்ணி- எா்ணாகுளம் அதிவிரைவு ரயில் (16364) ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.25 மணிக்கும், சிவகாசிக்கு 2.30 மணிக்கும் வந்து சேரும். எா்ணாகுளத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 11.55-க்கு வந்து சேரும்.

இந்த புதிய ரயில் சேவை மூலம் சிவகாசி, மதுரை பயணிகள் நேரடியாக எா்ணாகுளம், வேளாங்கண்ணிக்கு பயணிக்க இயலும்.இந்த தகவலை சிவகாசி மாநகர ரயில் பயணிப்போ் குழு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.