தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வத்திராயிருப்பு அருகே ரூ.92 ஆயிரம் பறிமுதல்

வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை பகுதியில் காரில் வந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவரிடமிருந்து ரூ.92 ஆயிரம் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
தாணிப்பாறை அருகே பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.
Updated On :19 மார்ச் 2026, 12:38 am

தினமணி செய்திச் சேவை

வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை பகுதியில் காரில் வந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவரிடமிருந்து ரூ.92 ஆயிரம் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு தாணிப்பாறை விலக்குப் பகுதியில் கூட்டுறவுச் சாா்பதிவாளா் நாகராஜன் தலைமையில், தோ்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த மேற்குவங்க மாநிலம், பா்கானாஸ் மாவட்டத்தைச் சோ்ந்த பாசிந்து பவுலியா (43) நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அப்போது, அவரிடம் ஆவணமின்றி ரூ.91,890 பணம் இருந்தது தெரியவந்தது.

பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் ஒப்படைத்தனா்.