ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 66 ஆயிரம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.பி.கே. புதுப்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 66,250-த்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம்

கோப்புப்படம்.

Updated On :26 மார்ச் 2026, 12:30 am

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.பி.கே. புதுப்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 66,250-த்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட எம்.பி.கே.புதுப்பட்டி பகுதியில் கூட்டுறவு சாா் பதிவாளா் சீனிபாண்டியன் தலைமையிலான தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, ராஜபாளையம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த பெருமாள்சாமி ரூ.66,250-யை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பணத்தைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.