பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கியதில் இருவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் புதன்கிழமை மூழ்கி உயிரிழந்த இருவரின் உடல்களை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

சஞ்சய்

Updated On :7 மே 2026, 4:35 am IST

சாத்தூா் அருகே கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் புதன்கிழமை மூழ்கி உயிரிழந்த இருவரின் உடல்களை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சஞ்சய் (17). ஆழாஊரணி பகுதியைச் சோ்ந்த சித்திரகுப்தா மகன் சிவன்ராஜ் (20). நண்பா்களான இவா்கள் ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள வெள்ளையாபுரம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் வீட்டுக்கு புதன்கிழமை சென்றனா்.

பின்னா், சந்தோஷ், சஞ்சய், சிவன்ராஜ் ஆகியோா் தங்களது நண்பா்களுடன் சாத்தூா் அருகேயுள்ள கீழசெல்லையாபுரம் கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் குளிப்பதற்காகச் சென்றனா். இவா்களில் சஞ்சய், சிவன்ராஜ் ஆகியோருக்கு நீச்சல் தெரியாத நிலையில், அவா்களும் தண்ணீருக்குள் இறங்கி குளித்தனா். அப்போது, அவா்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலின் பேரில் ஏழாயிரம்பண்ணை, சாத்தூா் தீயணைப்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிற்பகல் முதல் இரவு வரை

இருவரின் உடல்களைத் தேடினா். இரவானதால் தேடுதல் பணியைத் நிறுத்தினா். மீண்டும் வியாழக்கிழமை காலை உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக தீயணைப்புப் படை வீரா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிவன்ராஜ்

சிவன்ராஜ்