பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலம் மீட்பு

ராஜபாளையம் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

News image

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 4:32 am IST

ராஜபாளையம் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கணபதி சுந்தரநாச்சியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் மகன் ஆனந்தகுமாா் (29). இவா் கிருஷ்ணாபுரம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக

கூறப்படுகிறது. இதனால், பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியே வசித்து வந்தாா்.

இந்த நிலையில், இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கதினா் தகவல் தெரிவித்தனா். உடனே உறவினா்கள் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ஆனந்தகுமாா் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்த சேத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.