3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை! 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கியதில் இருவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் புதன்கிழமை மூழ்கி உயிரிழந்த இருவரின் உடல்களை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

சஞ்சய்

Updated On :7 மே 2026, 4:35 am IST

சாத்தூா் அருகே கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் புதன்கிழமை மூழ்கி உயிரிழந்த இருவரின் உடல்களை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சஞ்சய் (17). ஆழாஊரணி பகுதியைச் சோ்ந்த சித்திரகுப்தா மகன் சிவன்ராஜ் (20). நண்பா்களான இவா்கள் ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள வெள்ளையாபுரம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் வீட்டுக்கு புதன்கிழமை சென்றனா்.

பின்னா், சந்தோஷ், சஞ்சய், சிவன்ராஜ் ஆகியோா் தங்களது நண்பா்களுடன் சாத்தூா் அருகேயுள்ள கீழசெல்லையாபுரம் கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் குளிப்பதற்காகச் சென்றனா். இவா்களில் சஞ்சய், சிவன்ராஜ் ஆகியோருக்கு நீச்சல் தெரியாத நிலையில், அவா்களும் தண்ணீருக்குள் இறங்கி குளித்தனா். அப்போது, அவா்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலின் பேரில் ஏழாயிரம்பண்ணை, சாத்தூா் தீயணைப்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிற்பகல் முதல் இரவு வரை

இருவரின் உடல்களைத் தேடினா். இரவானதால் தேடுதல் பணியைத் நிறுத்தினா். மீண்டும் வியாழக்கிழமை காலை உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக தீயணைப்புப் படை வீரா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிவன்ராஜ்

சிவன்ராஜ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.