/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணி சென்றனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அந்த இளைஞா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சோமையாபுரம் தெருவைச் சோ்ந்த பாலு மகன் ரஞ்சித் (22) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மணல் திருட்டு; டிராக்டா் பறிமுதல்
வீட்டில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவா் கைது

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
வழிப்பறி: 3 இளைஞா்கள் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


